கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழ்.வடமாராட்சி சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடற்கரைக்கு அண்மைப்பகுதியில் பளைபொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவிலின் மூலம் குறித்த கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கல்பிட்டியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாக பளை பொலிசார் குறிப்பிட்டதுடன் இது தொடர்பாக தெரியவருவதாவது
பளை பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை சுண்டிக்குளம் பொலீசாருக்கு பளை பொலீசார் அறிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுண்டிக்குளப் பொலிசார் கடற்கரைக்கு அண்மையில் பொதிகள் இறக்கிக் கொண்டு இருந்ததை அவதானித்து கஞ்சா பொதிகளையும் படகு ஒன்றினையும், மற்றும் சந்தேகநபர் ஒருவரையும் பளை பொலிசார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றி உள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.