இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி (David Holly) இற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று 24 இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகவும், இரா. சாணக்கியனின் Vision For Batticaloa 2030 திட்டத்துக்கமைய வெளிநாட்டு தனியார் முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி குறித்தும், நாட்டின் சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.