தேசிய காவல் துறை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமையினால் காவல் துறை மா அதிபரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாக பதில் காவல் துறை மா அதிபர் சீ டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் பழி வாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட்ட பிரதி காவல் துறை மா அதிபர் லலித் அநுருந்த ஜயசிங்க மீண்டு சேவையில் இணைவதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் கேட்டறிய பதில் காவல் துறை மா அதிபர் சீடி விக்ரமரத்ன நேற்றைய தினம் இரண்டாவது தடவையாகவும், அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார். இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.