கோத்தாபய வெற்றி பெற்றால் மஹிந்த பிரதமர்

mahinda gotha
mahinda gotha

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர எம்.பி. தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையும் கோத்தாபய ராஜபக்‌ஷ நியமிப்பார் எனவும் அதற்காக, பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கோத்தாபயவிற்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் நானே பிரதமர் என நேற்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.