உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிகழ்வுகளானது இன்று கண்டியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவில் நடைபெறவுள்ளது.
உலக சுற்றுலாத் தினமானது வருடாந்தம் கொண்டாப்படுவதுடன் , இவ்வருடம் “சுற்றுலா மற்றும் கிராமிய அபிவிருத்தி ” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டுள்ளது.
அதன்படி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களை மையமாகக் கொண்ட, நிலையான சுற்றுலாத் துறையை உருவாக்குவதன் மூலம் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடைவதில் இதன்போது கவனம் செலுத்தப்படும்.
கோரோனா தொற்றுநோயால் சரிந்துவிட்ட சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு கவனும் செலுத்தப்படும்.