முதிரை மரம் மற்றும் பாலை தீராந்திகள் மீட்பு

IMG 20200927 WA0005
IMG 20200927 WA0005

கிளிநொச்சி பூநகரி அரசபுரம் காட்டில் இருந்து முதிரைமரக் குற்றிகள் மற்றும் பாலை மரதீராந்திகள் டிப்பர் ரக வாகனத்தில் சூட்சுமமாக கடத்தப்பட்டவேளை பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

IMG 20200927 WA0012
IMG 20200927 WA0012

யாழ்ப்பாணம் நோக்கி கற்களால் மறைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பொலிசார் சோதனை மேற்கொண்டு அவற்றை மீட்டுள்ளனர். பூநகரி 4ம் கட்டை பகுதியில் வைத்து இவை மீட்கப்பட்டதுடன், பளை மற்றும் யாழ்ப்பாண பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

IMG 20200927 WA0010

பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் பூநகரி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் பண்டார அவர்களின் கண்காணிப்பின் கீழ் பூநகரி பொலிஸ் பொறுப்பதிகாரி புஸ்பகுமரா தலைமையில் பூநகரி பொலிசாரினால் கடந்த 3 மாத காலப்பகுதியில் மிகவும் சூடசுமமான முறையில் இடம்பெற்ற சட்ட விரோதமான மர கடத்தல்கள் முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வாழக்கு தாக்கல் செய்ய பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

IMG 20200927 WA0005
IMG 20200927 WA0013
முதிரை மரம் மற்றும் பாலை தீராந்திகள் மீட்பு

முதிரை மரம் மற்றும் பாலை தீராந்திகள் மீட்பு

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Sonntag, 27. September 2020