கிளிநொச்சி பூநகரி அரசபுரம் காட்டில் இருந்து முதிரைமரக் குற்றிகள் மற்றும் பாலை மரதீராந்திகள் டிப்பர் ரக வாகனத்தில் சூட்சுமமாக கடத்தப்பட்டவேளை பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
![IMG 20200927 WA0012](https://thamilkural.net/wp-content/uploads/2020/09/IMG-20200927-WA0012-1024x768.jpg)
யாழ்ப்பாணம் நோக்கி கற்களால் மறைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பொலிசார் சோதனை மேற்கொண்டு அவற்றை மீட்டுள்ளனர். பூநகரி 4ம் கட்டை பகுதியில் வைத்து இவை மீட்கப்பட்டதுடன், பளை மற்றும் யாழ்ப்பாண பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![IMG 20200927 WA0010](https://thamilkural.net/wp-content/uploads/2020/09/IMG-20200927-WA0010-1024x768.jpg)
பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் பூநகரி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் பண்டார அவர்களின் கண்காணிப்பின் கீழ் பூநகரி பொலிஸ் பொறுப்பதிகாரி புஸ்பகுமரா தலைமையில் பூநகரி பொலிசாரினால் கடந்த 3 மாத காலப்பகுதியில் மிகவும் சூடசுமமான முறையில் இடம்பெற்ற சட்ட விரோதமான மர கடத்தல்கள் முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வாழக்கு தாக்கல் செய்ய பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
![IMG 20200927 WA0005](https://thamilkural.net/wp-content/uploads/2020/09/IMG-20200927-WA0005-1024x768.jpg)
![IMG 20200927 WA0013](https://thamilkural.net/wp-content/uploads/2020/09/IMG-20200927-WA0013-1024x768.jpg)