அண்மையில் களுத்துறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் மக்களுக்கு தீர்வு தரும் வகையில் அப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக, மில்லனிய பிரதேச செயலகத்தில் உள்ள முவப்படிய கிராமத்தில் இரண்டு வனவிலங்கு அதிகாரிகள் இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.