உடற்பயிற்சி மனித ஆரோக்கியத்திற்கு முதன்மை காரணி என்ற வகையில் கிளிநொச்சியில் நேற்று (27) விழிப்புணர்வு நடைபயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 6.30 மணிக்கு கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் ஆரம்பித்த நடைபயிற்சி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைவுற்றது.
விழிப்புணர்வு நடைபயிற்சியில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை ரி.யோசுவா, கிளிநொச்சி மாவட்ட மனநல மருத்துவர் ம. ஜெயராசா, மருத்துவர் தவராசா, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.