பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமிக்கப்படவில்லை! பொலிஸ் ஆணைக்குழு

download 4 1
download 4 1

இலங்கையின் பொலிஸ் துறையில் முதல் தடவையாக பெண் துணை காவல்துறை அதிபர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் இன்னும் இந்த பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான ஊடகங்கள், சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அதிபர் பிம்சானி ஜசிங்காராச்சி அந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார் என்ற தகவலை வெளியிட்டுள்ளன.

எனினும் இதில் உண்மையில்லை என்று ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பதவிக்கான தகுதியானவரை நியமிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பின்னர் அது பதில் பொலிஸ் அதிபருக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.