ருவான் விஜேயவர்த்தன கட்சியின் தலைமைப் ஏற்றால் நாம் அதனை வரவேற்போம் – விஜயகலா

Screen Shot 2016 11 25 at 14.32.42 300x263 1
Screen Shot 2016 11 25 at 14.32.42 300x263 1

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேயவர்த்தன கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றால் நாம் அதனை வரவேற்போம். அவரிற்கு தலைமைத் தாங்கும் பண்பு உள்ளது என முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த பொதுத் தேர்தலின் போது மக்களுக்கு பணம், பொருட்களை வழங்காத காரணத்தினால் தான் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததாக தெரிவித்த அவர்

நாடாளுமன்ற விவகாரம் தொடர்பாக எம்மால் பேச முடியாதுள்ளது. நாம் தற்போது நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தாத காரணத்தினால், வெளியில் இருந்து தான் அனைத்தையும் பார்க்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .