மக்களின் இறைமை அழிக்கப்படுகின்றது ரஞ்சித்மத்துமபண்டார குற்றச்சாட்டு!

e30515b1 38949b58 ranjith madduma bandara 850x460 acf cropped
e30515b1 38949b58 ranjith madduma bandara 850x460 acf cropped

மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டிய தருணம் வந்துள்ளது என
ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் பெற்றோர்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை போல உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீதியமைச்சர் பிரதமர் அமைச்சர்களுககு கூட தெரியாமல் அதனை உருவாக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியையும் அரசாங்கத்தினையும் சர்வாதிகாரிகளாக மாற்றும் நோக்கத்துடனேயே 20வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது என ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களின் இறைமை நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது தற்போது மக்களின் இறைமை அழிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளை கருத்தில்கொள்ளாமல் முடியாட்சியை ஏற்படுத்த 20வது திருத்தம் முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.