20வது திருத்தத்தை தாமும் எதிர்ப்பதாக நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் அறிவிப்பு !

625.500.560.350.160.300.053.800.900.160.90 4 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 4 2

20வது திருத்தம் நாட்டைபேரழிவை நோக்கி தள்ளும் எனவும் அதனை தாம் எதிர்க்கப்போவதாகவும் நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம் பெற்ற நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின்ஊடகவியலாளர் சந்திப்பில்
நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜெயசூரிய மற்றும் பல நாடாளுமன்றஉறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர் இதன் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது .

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தநீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கோயில்லை என தெரிவித்தார்.

உத்தேச திருத்தங்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கின்றன என தெரிவித்துள்ள கருஜெயசூரிய இதன்காரணமாக இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு எதிர்கட்சியினருக்கும் நாட்டு மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .