ஐக்கிய தேசிய முன்னணிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இன்று (Oct.01) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.