கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – பூநகரி பிரதான வீதியுடனான போக்குவரத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களிடம் வீதி அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பரந்தன் – பூநகரி பிரதான வீதியில் காணப்படுகின்ற பாலமொன்று சேதமடைந்துள்ளதன் காரணமாகவே குறித்த வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது .
எதிர் வருகின்ற 3 திகதி முதல் வருகின்ற 3 நாட்களுக்கு அவ் வீதியுடனான போக்குவரத்தை தவிர்க்குமாறு வீதி அதிகார சபை மக்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .