கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கை!

1592964623 Education 2
1592964623 Education 2

எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுமதி அட்டைகள் ஏற்கனவே பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அனுமதி அட்டைகளில் சுட்டிலக்கம் மற்றும் பரீட்சை நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2936 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், குறித்த பரீட்சையில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.