வடமாகாண விவசாய கண்காட்சி ஆரம்பம்!

வடமாகாண விவசாய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள விவசாய கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இந்தக் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைவது கண்காட்சியின் நோக்கம் என வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

வட்டக்கட்சி விவசாய பண்ணையில் நடைபெறும் இந்தக் கண்காட்சி இன்று நிறைவடையவுள்ளது. கண்காட்சியில் விவசாய உற்பத்தி, சேதனப் பசளை பயன்பாடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றன.