கட்டான பகுதியில் ஐவர் கைது வெளியானது காரணம் !

1595316493 arrested 2
1595316493 arrested 2

கட்டான, அக்கரபணஹ பிரதேசத்தில் சுமார் 30 மில்லியன் ரூபா (ரூ. 3 கோடி) பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, காரொன்றில் வந்த 5 பேரைக் கொண்ட குழுவினர் துப்பாக்கியைக் காட்டி, வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இந்தக் கொள்ளையைப் புரிந்துள்ளனர்.

குருநாகல், தம்புத்தேகம, நிக்கவெரட்டிய, கம்பஹா பகுதிகளிலிருந்து இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 7.2 மில்லியன் ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் கட்டான பொலிஸாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.