யாழ் கிளிநொச்சி தபால் அதிபர்களை சந்தித்தார் வியாழேந்திரன்!

download 4
download 4

இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகை தந்துள்ள தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கற்பட்ட தபால் அதிபர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறித்துகொண்டார்.

குறித்த சந்திப்பு நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தபால் அதிபர்களால் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆளனி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படாமை, தபால் நிலைய கட்டிடங்கள் இல்லாமை, வெளி மாவட்டங்களில் இருந்து வந்து,இங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது தபால் சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.சேனனாயக, வடமாகாண பிரதி தபால்மா அதிபதி திருமதி மதுமதி வசந்தகுமார்,வடமாகாண தபால் சேவை சிரேஸ்ர நிர்வாக செயலாளர் எஸ்.ஜெபரெட்ணம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed 3
unnamed 3