நாடு முழுவதும் உள்ள 665 பாடசாலைகளுக்கு 15445 லெப்டொப் கணனிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள ஒரு கல்வி வலயம் வீதம் அமையும் படி, தெரிவு செய்யப்பட்ட உயர்வகுப்புக்கள் உள்ள 665 பாடசாலைகளுக்கு இந்த கணனிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பாடசாலைகளிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொது முறைமையின் கீழ் இந்த மடிக்கணனிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.