யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசுவதைக்கு எதிராக குரல்கொடுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது
பசு வதைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உறக்கத்தில் இருந்த போது வீடு புகுந்து சிலர் பூசகரை அடித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவில் உள்ள பல ஆலயங்களில் பூஜை செய்யும் இவர் பசு வதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், இது தொடர்பான பல தகவலை பொலிஸாருக்கும் வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தடவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.