கம்பஹாவில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் பூட்டு!

download 4 1
download 4 1

கம்பஹா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகள், மேலதிக வகுப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அங்கு எந்த கற்றல் செயற்பாடும் இடம்பெறாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.