கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது-பரீட்சைகள் திணைக்களம்

ministry of eaducation
ministry of eaducation

இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை எதிர்வரும் 12ம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், குறித்த பரீட்சைகள் 2,648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. 

2,77,580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 85,244 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடதக்கது. 

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளது. 2,936 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 3,31,694 பேர் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.