20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு தொடர்பில் தவறான எண்ணங்களை கொண்டு வர எதிர்கட்சி முயற்சிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்பு தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.