பட்டப்பகலில் வீடு உடைக்கப்பட்டு 10 பவுண் நகை திருட்டு!

Thiruttu 1
Thiruttu 1

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இன்று பட்டப்பகலில் வீடு உடைக்கப்பட்டு 10 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தில் 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.