ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

rajarata
rajarata

விரைவாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழக மிஹிந்தலை வளாகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலையின் முகாமைத்துவ பிரிவு தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கு உள்ளான மாணவியொருவர் நேற்றைய தினம் கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.