கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய குழு!

6644
6644

கண்டியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பிலான ஆய்வுகளுக்காக 21 பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார் .

இதுவரையான காலப்பகுதியில், பல பாடசாலை கட்டிடங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காலப்பகுதியில் சுமார் 20 கட்டிடங்களையேனும் ஆய்வுக்குட்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், கண்டி நகரில், மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் கட்டிடங்களை எவ்வாறு நிர்மாணிப்பது என்பது தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்படும் எனவும் ஆளுநர் லலித் யு கமகே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது .