கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் தாயும் அவரது மகளான 16 வயது மாணவியும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் 1,500 மாணவர்கள் அவர்களது வீடுகளில் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
மேற்படி பாடசாலையில் கற்கும் திவுலுப்பிட்டிய பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக இன்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.