நாட்டின் நாளுமன்றமானது இன்று மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மினுவன்கொட பகுதியில் திடீரென அதிகரித்த கொரோனா பரவலை அடுத்து சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை முறையாக அனுசரித்து பாராளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இன்று இடம்பெறும். அத்துடன் ஏற்றுமதி – இறக்குமதி சட்டத்திற்கான விதிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .