முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச்செல்வார்கள் என்ற அச்சத்தினால் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி இன்றைய தினம் சுமார் ஒன்றரை மணிநேரம் சாட்சியமளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.