குவைத் மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரிஷாத் பதியுதீன்

2 3
2 3

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின்போது, இலங்கை – குவைத் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் எஸ். எம். எம். முஷாரப் ஆகியோரும் உடனிருந்தனர்.