நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார பாதுகாப்பு செயற்பட வேண்டும்- சபாநாயகர்!

mahinda yapa
mahinda yapa

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற் கொண்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயற்பட வேண்டும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது விசேட அறிவிப்பை விடுத்த சபாநாயகர், விருந்தினர்கள் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தேவையான அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மாத்திரம் வெளியிலிருந்து அழைத்து வரப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.