முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக தெரிவு செய்தமை 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான தெரிவு மாத்திரமாகும் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க ஏனையவர்கள் ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறாகவே செயற்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிரு தாக்குதல் தொடர்பில் விசாரைணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.