வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முடிவு எட்டப்பட்டுள்ளது .
இலங்கையில் கொரோனா நோய் தாக்கம் அலை இரண்டு இனங்காணப்பட்டுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து தன்மைப்படுத்தப்பட்டு இனங்காணப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் செயற்படும் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .