கம்பஹா மாவட்டத்தில் கொரொனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 135 பேருக்கு இன்றையதினம் (07) காலை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 5பேருக்கும் இன்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பெறப்பட்ட, மாதிரிகள் யாழ் மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.