கொழும்பில் பிரபல கல்லூரியின் மாணவன் ஒருவருடைய பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 3
3 3

கொழும்பில் பிரபல கல்லூரியின் மாணவன் ஒருவருடைய பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மருதானையிலுள்ள புனித ஜோசப் கல்லூரியிலுள்ள மாணவனின் பெற்றோருக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கல்லூரி இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மாணவனின் பெற்றோர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.