மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தொரிவித்துள்ளார்.
இச் சம்பவம் இன்று புதன்கிழமை 07 ஆம் திகதி பிற்பகல் குறிஞ்சாமுனை – புளியடிமடு பகுதியில் இடம் பொற்றுள்ளது.
குறித்த வாகனத்தில் மண் ஏற்றுவதற்காக அனுமதி பெற்ற இடத்தில் மண் ஏற்றாமல் வேறு ஒரு கிராமத்திலுள்ள ஆற்றில் மண் ஏற்றியபோதே உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.