வடமாகாண மக்களுக்கு உறுதிமொழி வழங்கிய மஹிந்த !

.jpg
.jpg

வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் தொகுதியான மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கிற்கு இந்த வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் சில கால தாமதம் ஏற்பட காரணம் என்னவெனில், 2018 ஆம் ஆண்டில் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2019 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2020 ஆம் ஆண்டுக்கும் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டுக்கென முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் 2021 ஆம் ஆண்டில் முழுமையாக பூர்த்தியாகும். எமது அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும்” என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.