தென்பகுதியை போன்று வட பகுதியில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை வடபகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற இடையூறுகளையும் நிவர்த்திசெய்யவும் கல்வி அமைச்சு ஆவனைச்செய்ய வேண்டும் எனவும் தற்பொழுது நாடு எதிர் நோக்கியுள்ள ஆபத்தான நிலைமையில் மாணவர்களின் பாதுகாப்பு மேக அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது .