நாடாளுமன்ற ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா!

parliment 3
parliment 3

பத்தரமுல்லை, பெலவத்தையிலுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இன்று சபையில் தமது தேவைக்காக பாராளுமன்ற அலுவல்கள் சேவைப்பிரிவிற்கு சென்ற போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய போதே சபாநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற அலுவுல்கள் சேவைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யபட்டுள்ளமையால் வெளிநபர்கள் இதில் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.