கோரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி!

kotta 1

உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்ப வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 அச்சுறுத்தல் உலகெங்கும் பரவிகொண்டிருக்கும் வேளையில் பலமானதொரு தேசமாக அனைவரும் ஒன்றிணைந்து அதனை தோற்கடித்து வெற்றி காணவேண்டும்.

நாட்டில் மீண்டும் கொவிட்-19 தாக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னர் போன்று சுகாதார துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டவர்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சவால் நிறைந்த சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதோடு, பல்வேறுப்பட்ட போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாமெனவும் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.