நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் ஒரு சில வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார படிமுறைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் 18 காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 92 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.