தேர்தலுக்காகவே மக்களை ஏமாற்றியது அரசாங்கம் – லக்ஷ்மன் கிரியெல்ல

download 7 1
download 7 1

தேர்தலை நடாத்தவே கொரோனா இல்லை என மக்களை ஏமாற்றியது அரசாங்கம் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) சிறப்பு கூற்றொன்றை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.

இது பற்றி அவர் கூறுகையில்,

இலங்கை அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றியுள்ளது, அரசாங்கத்தின் இந்த மோசடியே இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ காரணமாக அமைந்துவிட்டது.

அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கைக்கு இரண்டாம் இடமென சீன அரசாங்கத்தின் கணிப்பு பொய்யானது, அதனை நம்ப வேண்டாம் என மேலும் தெரிவித்துள்ளார்.