நீர்கொழும்பில் ஒருவருக்கு கொரோனா மூடப்பட்டது தனியார் மருத்துவமனை!

5656
5656

நீர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்று இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திலிருந்து மருந்து பெறுவதற்காக இளைஞர் ஒருவர் நீர்கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த தனியார் மருத்துவமனை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.