வவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு சந்தேகத்தில் இருவர் கைது!

kaithu

வவுனியாவில் கடந்த வாரம் மன்னார் வீதியில் திருடப்பட்ட தங்க நகைகள் இன்று ஒரு வாரத்தில் செட்டிகுளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது 


கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் வீதி, இரண்டாம் ஒழுங்கை , வேப்பங்குளத்தில் வீடு ஒன்றில் நான்கு பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானமடுவவின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்தவின் தலைமையில் சென்ற குழுவினரால் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் வேப்பங்குளத்தில் திருடப்பட்ட தங்க நகைகள் இன்று மீட்கப்பட்டதுடன் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 20 , 23 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .


கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.