தமிழர்களின்அபிலாசைகள் நிறைவேறும் தருணம் நெருங்கியுள்ளது – டக்ளஸ் எம்பி!

IMG 5141
IMG 5141

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் தற்போது கிட்டியுள்ளது என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியில் பங்காளர்களாக இருப்பதுடன் அந்த சந்தர்ப்பத்தை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு நான் கூறும் வழிமுறையை நோக்கி நீங்கள் அணிதிரண்டு வருவீர்களானால் அடுத்த ஐந்து வருடங்களில் நான், நீங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைளுக்கும் முடியுமானவரை தீர்வுகண்டு தருவேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நல்லூர் முத்திரைச்சந்தி பகுதி மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

இப்பகுதி மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக காணி உரிம பிரச்சினை இப்பகுதி மக்களின் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது நிரந்தர வீடு இன்மை, வாழ்வாதார பிரச்சினை என பல தேவைப்பாடுகளுடன் காணப்படுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிந்திக்காதிருப்பது அவர்களது சுயநலமாகவே இருக்கின்றது.

ஆனால் நாம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே முதன்மை நோக்காகக் கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது இந்த பணிகள் மேலும் வலுப்பெறுவதற்கு எமக்கு அதிகளவான அரசியல் அதிகாரம் தேவையாக இருக்கின்றது. இந்த பலத்தை மக்கள் இம்முறை எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

நீங்கள் எம்மை நம்புங்கள் நாம் செய்வோம் செய்விப்போம் என தெரிவித்துள்ளார்.