தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தாக்குதல் !

attack 720x380 1
attack 720x380 1

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்தகருமான ஜெயக்குமார் மீது கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த சம்பவம்தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நேற்றையதினம் (09) வெள்ளிக்கிழமை கிளிநொச்சிபொதுச்சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது சிவில் உடையில் இருந்த கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி, இழுத்து விழுத்தி தாக்குதல் மேற்கொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சந்தை வர்த்தகர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்திச் சென்றிருந்தனர். மீண்டும் 5 நிமிடத்தில் வந்த அவர்கள்ஜெயக்குமாரிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை என கேட்டதாக கூறப்படுகின்றது.

நண்பகல் என்பதால் நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள் கடையை இப்படியேவிட்டு செல்ல முடியாது அதனை விட ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி எனதுஉதவியாளர் வருகைக்காக காத்திருக்கின்றேன் என பதிலளித்துள்ளார்.

உனக்கு கடைக்கு போய் வாங்குவதற்கு என்ன என்று கேட்டவாறு சிவில் உடையில்இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாற்றுத்திறனாளியான ஜெயக்குமாரை இழுத்துவீழ்த்தி தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் சந்தைவர்த்தகருமான ஜெயக்குமார் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர்காரியாலயத்திலும்,மனித உரிமை ஆணைக் குழுவிலும் தனது முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் குறித்த வர்த்தகர் ஒரு முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது