கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பில் வெளியான தகவல்!

BOI
BOI

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து முதலீட்டு சபை இதனை தௌிவுபடுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் பணியாளர்கள் சிலருக்கு பி சி ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெறுபேறுகள் வெளியானதன் பின்னரே தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்ட மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மாத்திரமே தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.