யாழ்.மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்றுகள் எரியூட்டி அழிக்கப்பட்டன!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று (10) சான்றுப் பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன.

கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிறைவடைந்த நிலையில் அவற்றின் சான்றுப்பொருட்களை அழிக்க மன்று உத்தரவிட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் ஜே.ஜெயரஞ்சனின் ஏற்பாட்டில் அவை எரியூட்டி அழிக்கப்பட்டன.