நாட்டின் கம்பஹா மாவட்டத்தின் மினுவான்கொடஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படத்தை தொடர்ந்து நாட்டின் சில பகுதிககளில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 101 பேர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த காலப்பகுதியில் 28 வாகனங்களையும் காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.