சீனாவின் நிதியுதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர்!

unnamed 6 2
unnamed 6 2

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் சீன அரசாங்கம் இலங்கைக்கு 600 மில்லயன் யுவான் நிதியுதவியை வழங்கியுள்ளதா அறிவித்துள்ளது.

சீனா இலங்கைக்கு இந்த நிதியுதவியை இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் ஒக்டோபர் 9 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரம் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமையவே வழங்கியுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் சீனாவின் இந்த நிதியுதவிக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி சீனாவிடமிருந்து சலுகை அடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தத்திலும் இலங்கை விரைவில் கையெழுத்திட உள்ளமை குறிப்பிடத்தக்கது.